05th January 2024 16:20:28 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்கள் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 02) அநுராதபுரம் அபிமன்சால I க்கு விஜயம் செய்து இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி மற்றும் அவரது குழுவினரை இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் வீரர் ஒருவரினால் நுழைவாயிலில் அன்புடன் வரவேற்கப்பட்டது. இந்த விஜயத்தின் போது சிரேஷ்ட அதிகாரிகள் மருத்துவமனை வசதிகளையும் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களையும் பார்வையிட்டனர். மேலும் நல்லெண்ணத்தின் அடையாளமாக, புத்தாண்டுப் பரிசுகள் வழங்கப்பட்டதுடன், சிகிச்சை பெற்று வரும் அனைத்து நபர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
விஜயத்தின் முடிவில் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டுக்களை எழுதினார்.