05th January 2024 16:17:36 Hours
58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்டிடப்ளியூகேஎன் ஏரியகம ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட அந்துரென் எலியட (இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு) சூரிய சக்தி நன்கொடை நிகழ்ச்சி ஊடாக புத்தளம் மாவட்டம் சின்னவில்லுவத்தையில் 65 குடும்பங்களுக்கு சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகளை 2023 டிசம்பர் 29 அன்று வழங்கப்பட்டது. மின்சார வசதி இல்லாத பாடசாலை செல்லும் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இந் நிகழ்விக்கான அனுசரனையினை விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் உள்ள இலங்கை சமூகத்தவர்கள் வழங்கினர். இந்தச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு. பராக்கிரம கிரியாகம மற்றும் மேஜர் அருண பெரேரா (ஓய்வு) ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.