05th January 2024 16:13:00 Hours
கஜபா படையணி படையினர் புதிதாக நியமனம் பெற்ற பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ். பீரிஸ் ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்களை கௌரவிக்கும் வகையில் சாலியபுர, படையணி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 05) பாராட்டு விழா நடாத்தினர்.
வருகை தந்த பதவி நிலைப் பிரதானிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், பிரதி நிலைய தளபதியினால் வரவேற்கப்பட்டார். பின்னர், கஜபா படையணியின் ஸ்தாபகத் தந்தை மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்துவதற்கு அழைக்கப்பட்டார்.
அன்றைய பிரதம அதிதிக்கு கஜபா படையணி படையினரால் மரியாதை வழங்கப்பட்டது. இந்நாளின் நினைவுகளைச் சேர்க்கும் வகையில் பதவி நிலைப் பிரதானி படையணி வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்ததுடன், படையணி பணியாளர்களுடன் குழு படங்களும் எடுத்துக் கொண்டார். அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரம் மற்றும் பதவி நிலைப் பிரதானியின் படையினருக்கான உரையுடன் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. இந் நிகழ்ச்சியில் கஜபா படையணி பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.