04th January 2024 19:04:44 Hours
68 வது காலாட் படைப்பிரிவின் படையினர் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து மிகவும் தேவையான ஓய்வை பெற்றுக்கொள்ளும் நிமித்தம் சமீபத்தில் யாழ்.குடாநாட்டிற்கு இரண்டு நாள் உல்லாசப் பயணத்தை மேற்கொண்டனர். இந்த மறக்கமுடியாத பயணம் டிசம்பர் 30 மற்றும் 31 ம் திகதிகளில் இடம் பெற்றதுடன், 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் கட்டளைக்கமைய இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த உல்லாசப் பயணத்தில் யாழ். குடாநாட்டில் அமைந்துள்ள பல்வேறு குறிப்பிடத்தக்க இடங்களுக்கு விஜயம் செய்ததுடன். இதன்போது 68 வது காலாட் படைப்பிரிவில் சேவையாற்றும் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.