Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd January 2024 21:37:15 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினருக்கான வீட்டு திட்டம்

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான தொடர்ச்சியான வீட்டுத்திட்டத்தின் கீழ் முன்னாள் படையணி படைத் தளபதியின் கருத்திற்கமைய நொச்சியாகம, எப்பாவல, பஹலமரகஸ்வெவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டை தகுதியான 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு சனிக்கிழமை (டிசம்பர் 30) வழங்கப்பட்டது.

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கினர். இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உத்பலா ஹெட்டியாராச்சி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.