03rd January 2024 16:44:50 Hours
52 வது காலாட் படைப்பிரிவின் படையினர் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) கட்டைக்காடு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கரோல்களை ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கலந்து சிறப்பித்தார், கௌரவ அதிதியாக யாழ் ஆயர் வண. கலாநிதி ஜஸ்டின் பெர்னாட் ஞானப்பிரகாசம் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த சுமார் 2000 பொதுமக்கள் கலந்துகொண்டனர்.