03rd January 2024 16:42:37 Hours
மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் புதிய தலைமை சமிக்ஞை அதிகாரியாக புதன்கிழமை (ஜனவரி 03 )இராணுவ தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
மத அனுஷ்டானங்கள் மற்றும் ‘செத்பிரித்’ பராயணங்களுக்கு மத்தியில், மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டார். பின்னர் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன் தனது எதிர்கால நோக்கங்களையும் முன்வைத்தார்
தற்போது, இவர் ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பதவி வகிக்கின்றார்.