02nd January 2024 18:35:54 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும் சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் யூ.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு இலங்கை சிங்க படையணியின் படையினரால் அம்பேபுஸ்ஸ சிங்க படையணி தலைமையகத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 30) பிரியாவிடை வழங்கும் நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
பின்னர் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொழுத்திட்டார்.
அவர் விடைப்பெறுவதற்கு முன் சிங்க படையணியின் 'போர் வீரர்' நினைவு தூபிக்கு மரியாதை செலுத்தினார். அவரது பதவி காலத்தில் அவருக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு சிங்க படையணியில் சேவையாற்றும் அனைத்து நிலையினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்நாளின் நினைவுகளைச் சேர்க்கும் வகையில், வெளிசெல்லும் தளபதி குழு படம் எடுத்துக் கொண்டதுடன் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தார். அனைத்து பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் வெளிசெல்லும் படைத் தளபதிக்கும் அவரின் பாரியாருக்கும் பிரியாவிடை விருந்து வழங்கினர்.