02nd January 2024 18:32:23 Hours
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில், 232 வது காலாட் பிரிகேட் மற்றும் 12 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் சேதமடைந்த கிரண்-குடும்பிமலை மற்றும் தொப்பிகல-பெரியவட்டுவான் வீதிகளை 26 டிசம்பர் 2023 புனரமைத்து போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அப்பகுதியில் சேதமடைந்த உட்கட்டமைப்பை சீரமைப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். 232 வது காலாட் பிரிகேட்டின் பிரிகேடியர் கேஏ. புஷ்ப குமார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இந்த திட்டத்தை மேற்பார்வையிட்டார்.
சீரற்ற காலநிலை காரணமாக மாதுருஓயா மற்றும் வாழைச்சேனை ஆறு, கிரண், புலிபாஞ்சகல், வடுமுனை, குடிம்பிமலை, தொப்பிகல மற்றும் பெரியவட்டுவான் ஆகிய வீதிகள் 5-7 அடிக்கு மேல் வெள்ளத்தால் மூழ்கியிருந்தமையால் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட மக்கள் சுமார் இரண்டு வாரங்களாக பாதிக்கப்பட்டிருந்தனர்.