Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd January 2024 18:22:38 Hours

மல்லாவி ஆதார வைத்தியசாலையில் டெங்கு ஒழிப்பு திட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதைத் தடுக்கும் முயற்சியாக 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் 2023 டிசம்பர் 29 ஆம் திகதி மல்லாவி ஆதார வைத்தியசாலையில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை மேற் கொண்டனர்.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 561 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டத்தில் வன்னி பாதுகாப்புப் படையினரும் மல்லாவி மருத்துவமனை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.