02nd January 2024 18:19:40 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், "வடக்கில் இரண்டாவது தெங்கு முக்கோண வலயம்" என்ற கருத்தின் கீழ் தென்னம் பிள்ளைகள் நடும் நிகழ்வு வியாழக்கிழமை (28 டிசம்பர் 2023) நடைபெற்றது.
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 561 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது 561 வது காலாட் பிரிகேட் முகாம் வளாகத்தில் 175 தென்னம் பிள்ளைகள் நடும் பணியினை மேற்கொண்டனர்.