29th December 2023 20:43:44 Hours
பிரிகேடியர் டபிள்யூ.எல்.ஏ.சி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இராணுவ தலைமையகத்தின் போக்குவரத்து பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக வியாழக்கிழமை (டிசம்பர் 28) கடமைகளைப் பொறுப்பேற்றார்.
பணிப்பகத்தின் அதிகாரிகள் முன்னிலையில் அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதை குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.பீ.எம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்திற்கு முன்னர், பிரிகேடியர் டபிள்யூ.எல்.ஏ.சி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 52 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதியாகப் பணியாற்றினார்.