Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd December 2023 14:41:20 Hours

வாத்துவ 'காசா த லா பிளேயா' விருந்து மண்டபம் விருந்தினர்களுக்காக திறப்பு

லயா ஹோட்டல் உணவுத் திருவிழாவின் திறப்பு விழாவின் போது வியாழன் (21) 'காசா டி லா பிளேயா', கடற்கரை இல்லம் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. இந் நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு லயா பீச் வாத்துவவில் புதிதாகப் புனரமைக்கப்பட்ட விருந்து மண்டபத்தை திறந்து வைத்தார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் சிந்தனையில் உருவான 'காசா டி லா பிளேயா' ஒரு அற்புதமான விருந்து மண்டபமாக மாற்றப்பட்டது. விருந்தினர்களுக்கு நேர்த்தியான மற்றும் சேவையின் மிக உயர்ந்த தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் இடம் வடிவமைக்கப்பட வேண்டும் என்று இலங்கை இராணுவத் தளபதி விரும்பினார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

திறப்பு நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அவர்களது துனைவியார், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.