23rd December 2023 14:31:20 Hours
561 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎம்ஜீ பண்டாரநாயக்க யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2023 டிசம்பர் 07 கனகராயன்குளத்தில் அமைந்துள்ள 561 வது காலாட் பிரிகேட்டின் 14 வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது.
ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, தலைமையக விளையாட்டு மைதானத்தில் நான்கு அணிகள் பங்கேற்ற கரப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தப் போட்டியானது படையினர்களுக்கு அவர்களது விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது மேலும் விளையாட்டின் மீது பகிரப்பட்ட விருப்பத்தின் மூலம் அவர்கள் ஒன்றிணைவதற்கு ஒரு தளமாகவும் அமைந்தது.
அத்துடன் யாழ்.போதனா வைத்தியசாலையுடன் இணைந்து இரத்ததானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 125க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், கனகராயன்குளம் ஸ்ரீ சம்புத்த ரஜமஹா விகாரையிலும், கனகராயன்குளம் பிள்ளையார் கோவிலிலும் சமய ஆசிர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றன.
பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎம்ஜி பண்டாரநாயக்க யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வருகையை தொடர்ந்து பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நிகழ்வின் நினைவாக வளாகத்தில் மரக்கன்றும் நடப்பட்டது.
பின்னர், பிரிகேட் தளபதி அனைத்து படையினருக்கும் உரையாற்றிய பின்னர், அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு விருந்தில் கலந்துகொண்டு அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் கடமைக்காக அவர்களைப் பாராட்டினார். இறுதியாக, இசை நிகழ்ச்சி மற்றும் மாலையில் இரவு உணவு விருந்துடன் அனைத்து நிலையினரின் மனதையும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் ஆண்டு நிறைவு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.