Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th December 2023 21:35:02 Hours

இலங்கை சிங்க படையணியின் ஓய்வு பெறும் இரண்டு பிரிகேடியர்களுக்கு கௌரவிப்பு

இலங்கை சிங்க படையணியில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சேவைகளை நிறைவு செய்ததன் பின்னர் ஓய்வு பெறும் பிரிகேடியர் எம்ஜீடபிள்யூ விமலசேன ஆர்எஸ்பீ மற்றும் பிரிகேடியர் ஏஎம்எஸ்டிபி அதிகாரி ஆர்எஸ்பீ ஆகியோருக்கு முறையான பிரியாவிடை மரியாதை 2023 டிசம்பர் 14 அன்று அம்பேபுஸ்ஸ படையணி தலைமையகத்தில் வழங்கப்பட்டது.

இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இருவருக்கும் தனித்தனியாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதை என்பன வழங்கப்பட்டன.

ஓய்வுபெறும் பிரிகேடியர்கள் அன்றைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவுச் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிகள் அனைத்து நிலையினருடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதுடன் குழு படம் எடுத்துக்கொள்வதற்கு முன் அனைத்து நிலையினருக்கும் உரையாற்றினர், அதைத் தொடர்ந்து உத்தியோகபூர்வ மதிய உணவிருந்தும் இடம்பெற்றது.

அதேபோன்று, ஓய்வு பெறும் பிரிகேடியர் எம்ஜீடபிள்யூ விமலசேன ஆர்எஸ்பீ மற்றும் பிரிகேடியர் ஏஎம்எஸ்டிபி அதிகாரி ஆர்எஸ்பீ ஆகியோருக்கு இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் யூ.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்களால் சிறப்பு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிகள், அனைத்து அதிகாரிகளிடம் உரையாடியதுடன் சிங்க படையணி குடும்பத்தின் அங்கத்தவர்கள் என்ற முறையில் ஒப்படைக்கப்பட்ட கடமைகளைச் செய்ய அனைவரும் வழங்கிய உதவி மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதேவேளை, இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சியாமலி விஜேசேகர அவர்களினால் திருமதி ஜீவனி குருகே மற்றும் திருமதி சித்ராகுமாரி ரணசிங்க ஆகியோருக்கு தனித்தனியாக விசேட நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. சிரேஷ்ட அதிகாரிகள் , படையணியின் பேரவை உறுப்பினர்கள் மற்றும் வெளியேறும் சிரேஷ்ட அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள், இலங்கை சிங்க படையணியின் அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவியார் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.