Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th December 2023 22:42:49 Hours

மேஜர் ஜெனரல் ஏ.கே ஜயவர்த்தன (ஓய்வு) அவர்களுக்கு இறுதி இராணுவ மரியாதை

35 வருடங்களுக்கும் மேலாக நாட்டிற்கு சேவையாற்றிய இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் ஏகே ஜயவர்தன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் இராணுவ இறுதி மரியாதை புதன்கிழமை (20) பிற்பகல் பொரளை பொது மயானத்தில் அவரது இராணுவ தோழர்கள் மற்றும் ஏனைய பங்களிப்பாளர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

அந்தி சாயும் போது மறைந்த அதிகாரிக்கு வணக்கம் செலுத்த ஓய்வு பெற்ற சிரேஸ்ட அதிகாரிகள், முதன்மை பணிநிலை அதிகாரிகள், சிரேஸ்ட அதிகாரிகள், பணிப்பாளர்கள் மற்றும் இதர துக்கப்படுபவர்களும் இருந்தனர்.

இராணுவ மரபுகளின்படி படையினர் பூதவுடலை தாங்கிய பேழையினை பெற்று, தேசியக் கொடி போர்த்தி துப்பாக்கி வண்டியில் வைப்பதற்கு முன்பு மயானத்தின் நுழைவாயில் ஆயுத மரியாதை வழங்கினர்.

இறுதி ஊர்வலம் மயானத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், சிரேஸ்ட அதிகாரிகளின் பிரதிநிதிகள் சவப்பெட்டியை முறையாகப் பெற்றுக்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் சவப்பெட்டியின் பின்னால் அணிவகுத்து சுடுகாட்டை நோக்கிச் சென்றனர்.

இலங்கை இராணுவத்தின் துணைத் தளபதியினால் வெளியிடப்பட்ட முறையான விசேட கட்டளை பகுதி I நிகழ்வு துக்கத்தில் இருந்தவர்களுக்கு இராணுவ நிறைவேற்று பணிப்பாளரினால் வாசிக்கப்பட்டது. பின்னர் இராணுவ மரபுகளுக்கு இணங்க படையினர் இறந்தவருக்கு வணக்கம் செலுத்தியதுடன், அடையாள துப்பாக்கி வணக்கம் செலுத்தப்பட்டது. இது ஒரு இராணுவ அதிகாரியின் மறைவின் போது பெறக்கூடிய மிக உயர்ந்த அஞ்சலி ஆகும்.

இறுதி வாசிப்பின் சில நிமிடங்களுக்குப் பிறகு, புகழ்மிகு வீர்ர் அவரது இறுதி ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி எழுப்பலுடன தேகம் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன் பின்னர், இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களால் மறைந்த மேஜர் ஜெனரல் ஏகே ஜெயவர்த்தன(ஓய்வு) ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் பொது வாழ்க்கையின் போது சம்பாதித்த அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை அவரது குடும்பத்திற்கு வழங்கினார்.

சிரேஸ்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மேஜர் ஜெனரல் ஏகே ஜெயவர்த்தன (ஓய்வு) ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட சிறப்பு கட்டளை பகுதி 1 பின்வருமாறு;