20th December 2023 22:19:27 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 56 வது காலாட் படைப்பிரிவின் 561 வது காலாட் பிரிகேடின் 16 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் நெடுங்கேணி தெற்கு கிராம சேவகர் பிரிவின் மக்களுடன் இணைந்து டிசம்பர் 18 ஆம் திகதி நெடுங்கேணி பிராந்திய வைத்தியசாலையில் சிரமதானப் பணியை மேற் கொண்டனர்.
வடக்கில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையின் வடிகால் அமைப்புக்கள் அடைக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, 16 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் அடைப்பை அகற்றி முழு வளாகத்தையும் சுத்தம் செய்தனர்.