20th December 2023 21:30:09 Hours
பிரதம சமிக்ஞை அதிகாரியும் இராணுவ சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.எஸ் ரத்நாயக்க என்டியூ அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (17 டிசம்பர் 2023) 7 வது இராணுவ சமிக்ஞை படையணிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் பணியாளர்கள் அவரை மரியாதையுடன் வரவேற்றனர். படையினருக்கான உரையின் போது, நலன்புரி வசதிகளின் முக்கியத்துவத்தையும், அனைத்து நிலையினருக்கும் ஒழுக்கத்தின் உயர் தரத்தைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.