19th December 2023 22:16:40 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 74 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கன்னொருவை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பாடசாலையில் வெள்ளிக்கிழமை (8 டிசம்பர்) வீரமரணம் அடைந்த இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் போர் வீரர்களின் நினைவாக அஞ்சலி அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
இராணுவத் வழங்கல் கட்டளைத் தளபதியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்கள் நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற படையணியின் படைத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் உயிரிழந்த போர்வீரர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், வீரமரணம் அடைந்த இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) 10 பௌத்த பிக்குகளுக்கு தானம் வழங்கப்பட்டது.
74 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு டிசம்பர் 10 முதல் 11 வரை, 'பிரித்' பாராயணம் மற்றும் தானம் வழங்கும் நிகழ்ச்சி நடாத்தப்பட்டதுடன், கன்னொருவாவில் அனைத்து ஏற்பாடுகளிலும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதி கலந்து கொண்டார்.
இரவு விருந்துபசாரத்துடன் ஆண்டு நிறைவு விழா ஏற்பாடுகள் முடிவடைந்தன.