18th December 2023 10:03:03 Hours
குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ காரியவசம் அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 500 மீ நீளமுள்ள துப்பாக்கி சூட்டு திடலை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 17) பிற்பகல் திறந்து வைத்தார்.
குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் தளபதி, முதல் சுற்றில் துப்பாக்கிச் சூடு நடத்தி புதிய துப்பாக்கி சூட்டுதிடலை திறந்து வைக்குமாறு இராணுவத் தளபதியை அழைத்தார்.
அடுத்து, இராணுவத் தளபதி ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடன் துப்பாக்கிச் சூட்டு திடலின் முழு சுற்றளவையும் பார்வையிட்டதுடன், நினைவுச் சின்னமாக வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தர். பின்னர் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரம் மற்றும் அன்றைய பிரதம விருந்தினருக்கான நினைவுச் சின்னம் வழங்குதலுடன் நிகழ்வுகள் முடிவடைந்தன.
இராணுவத் தளபதி குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கியதுடன், குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டுக்களையும் எழுதினார். அதே இடத்தில் அமைக்கப்பட்ட குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் ஒருங்கிணைப்பு அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது.
இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய நிகழ்வில் பங்கேற்றனர்.