06th December 2023 20:06:12 Hours
68 வது காலாட் படைப்பிரிவின் 14 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு திங்கட்கிழமை (4 டிசம்பர் 2023) அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.
படைப்பிரிவின் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் இரத்த தானம் செய்தனர். முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் யாழ். பிராந்திய இரத்த வங்கியைச் சேர்ந்த மருத்துவக் குழுக்கள் இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உதவினர்.