Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th December 2023 20:15:14 Hours

தேசிய முய் தாய் சாம்பியன்ஷிப் – 2023 போட்டியில் இராணுவ வீரர்கள் வெற்றி

சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் 2023 நவம்பர் 30 முதல் டிசம்பர் 04 வரை நடைபெற்ற தேசிய முய் தாய் சாம்பியன்ஷிப் – 2023 போட்டியில் இராணுவ வீரர்கள் சாம்பியன்ஷிப்பை வென்றனர்.

நாடளாவிய ரீதியில் இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் 30 விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 600 முய் தாய் வீரர்கள் போட்டியிட்டனர்.

இலங்கை இராணுவ முய் தாய் ஆண் மற்றும் மகளிர் வீரர்கள் இறுதிப் பட்டியலில் 15 தங்கப் பதக்கங்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்), 20 வெள்ளிப் பதக்கங்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களை (ஆண்கள் மற்றும் பெண்கள்) பெற்றனர்.

இறுதிப் போட்டியில் பிரதி தலைவர் கேணல் பீ.பீ.சீ பெரேரா (முதல் தேசிய பயிற்சியாளர்), முகாமையாளர் மேஜர் ஆர்என்ஐபீ ரூபசிங்க, அணி பயிற்சியாளர் இரண்டாம் லெப்டினன் எம்ஏடிடி மல்லவகே ஆகியோர் இராணுவ அணியினை வழிநடத்தினர்.