05th December 2023 19:24:29 Hours
தற்போதைய இராணுவ மறுசீரமைப்பு செயல்முறைக்கமைய 5 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி வியாழக்கிழமை (நவம்பர் 30) ஒழுக்கப்பணிப்பகத்தின் பணிப்பாளரின் கட்டளைக்கு அமைய பொல்ஹெங்கொட படையணி தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
5 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியானது 2009 டிசம்பர் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முதலாம் படை, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 57 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 66 வது காலாட் படைப்பிரிவு ஆகியவற்றிற்கு தேவையான கடமைகளை வழங்கியது.
இலங்கை இராணுவத்தின் ஒழுக்கப் பணிப்பகத்தின் பணிப்பாளரும் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.சி.ஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி. அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த பிரிவின் மீள் நிலைநிறுத்தத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1) நடைபெற்றது.
5 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டி.ஜி.ஐ.பீ கெம்பொரகே யூஎஸ்பீ பீஎஸ்சீ எல்எஸ்சீ, அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் முன்னிலையில் படையலகு கொடி ஏற்றி பணிகளை தொடங்கினர். படையணியின் ஆரம்ப நிகழ்வின் நினைவாக குழு படமும் எடுத்துக் கொண்டனர்.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.சி.ஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்கள் மறுசீரமைப்பு பற்றிய உரையை நிகழ்த்தியதுடன், விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை எழுதினார். அன்றைய தின நிகழ்வுகள் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்துடன் முடிவடைந்தது.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் நிலைய தளபதி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.