05th December 2023 18:04:35 Hours
இந்திய பிரதி கடற்படை பிரதானி வைஸ் அட்மிரல் சஞ்சய் ஜஸ்ஜித் சிங் ஏவிஎஸ்எம் என்எம் அவர்கள் திங்கட்கிழமை (டிசம்பர் 04) இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை புதுடில்லியில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இரு தரப்பினரும் தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்கள், இரு நாடுகளின் ஆயுதப்படைகளுக்கு இடையே கூட்டு பயிற்சியை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள சமகால பிரச்சினைகள் தொடர்பாகவும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இறுதியில், பாராட்டு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.
இலங்கை இராணுவத்தின் இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, முழு பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரும் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியுமான பிரிகேடியர் பிஎம்எ பாலசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) இந்திய இராணுவத் தளபதியின் அழைப்பின் பேரில் இந்தியாவை சென்றடைந்தார்.