05th December 2023 19:33:48 Hours
இலங்கை கவச வாகனப் படையணியின் மேஜர் ஜெனரல் பீஎஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 22 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக திங்கட்கிழமை (04 டிசம்பர் 2023) கடமை பெறுப்பேற்றார்.
திருகோணமலை 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டதுடன் பின்னர், அனைத்து நிலையினருக்கு உரையாற்றினார்.
புதிய அலுவலகத்தை பொறுப்பேற்றதன் அடையாளமாக 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டுவைத்தார்.
இந் நிகழ்வில் படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.