Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd December 2023 22:17:53 Hours

12 வது காலாட் படைப்பிரிவினால் ரிதியகம பூங்காவில் தற்காலிக சுற்று வேலி அமைப்பு

தென் மாகாணத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான சீரற்ற காலநிலை காரணமாக, ரிதியகம பொழுதுபோக்கு பூங்காவின் வெளிப்புற சுற்று வேலியின் 100 மீற்றர் பகுதி டிசம்பர் 01 அன்று சேதமடைந்தது.

சேதமடைந்த வேலியில் அந்த விலங்குகள் வெளியேறும் முன் வேலியைச் சரிசெய்யும் நோக்கில் பூங்காவின் அதிகாரிகள், 12 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் உதவியை நாடினர்.

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சிஎஸ் முனசிங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜி, 20 வது சிங்க படையணி படையினர் மற்றும் பொறியியல் அதிகாரி உட்பட 35 படையினரை விலங்குகள் வெளியேறுவதற்கு முன்னதாக விரைந்து பணியில் ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தினார்.

சில மணிநேரங்களில் பணியை நிறைவு செய்த படையினருக்கு பூங்காவின் அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.