Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd December 2023 21:45:29 Hours

வன்னி தளபதி 3 வது இலங்கை கவசப் வாகன படையணி மற்றும் 3 வது இலங்கை இராணுவ மருத்துவ படையணிக்கு விஜயம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ விஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 2023 நவம்பர் 29 நெலும்குளத்தில் உள்ள 3 வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

3 வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணிக்கு வருகை தந்த வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியை கட்டளை அதிகாரி மேஜர் எஸ்எச்எஸ் மதுபாஷினி அவர்கள் வரவேற்றார்.

பின்னர், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக பிரதேசத்தில் 3 வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணியினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் மருத்துவ பணிகள் மருத்துவ நிபுணர்களை அனுப்புதல் தொடர்பாக கட்டளை அதிகாரியால் விளக்கமளிக்கப்பட்டதுடன். சுகாதார மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்பாக படையினருக்கு ஆறிவூட்டும் நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

பின்னர், இராணுவ தாதியர் பயிற்சிப் கல்லூரியின் கட்டிடத்தின் கட்டுமானப் பணியை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

பின்னர், அவர் சிப்பாய்களின் தங்குமிட விடுதிகளைப் பார்வையிட்டதுடன் மற்றும் அவர்களின் நலன்புரி வசதிகளையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து , 3வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணிக்கு அவர் விஜயம் செய்ததைக் குறிக்கும் வகையில் கட்டளை அதிகாரியால் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. முகாம் வளாகத்தில் இருந்து அவர் புறப்படுவதற்கு முன்பு 3வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணி படையினருடன் குழுபடம் எடுத்துக்கொண்டார்.

3வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணிக்கு விஜயம் செய்த வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி பின்னர், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் உள்ள ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் ஞாபகார்த்த இராணுவ விடுதிக்கு விஜயம் செய்ததுடன் அங்கு சிகிச்சை பெறும் நோயாளர்களுடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், விடுதியில் உள்ள வசதிகளையும் பார்வையிட்டார்.

போதனா வைத்தியசாலை வளாகத்தில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்மாணப் பணிகளையும் பார்வையிட்டார். இதன்போது வன்னி தளபதியுடன் அனுராதபுரம் போதன வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரும் கலந்துகொண்டார்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ விஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 29 நவம்பர் 2023 அன்று 3 வது இலங்கை கவச வாகன படையணிக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன் போது இலங்கை கவசப் வாகன படையணி வளாகத்திற்கு வருகை தந்த வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியை, கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் என்வீஎஎம் விதானகே ஆர்ஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் வரவேற்றார்.

இதன்போது 3 வது இலங்கை கவசப் வாகன படையணியின் கட்டளை அதிகாரியினால் 3 வது இலங்கை கவசப் வாகன படையணியின் பங்கு மற்றும் பணிகள் தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டது. அவர் கவச தாங்கி தரிப்பிடங்களை பார்ப்பதற்கு முன்னர், கட்டப்பட்டு வரும் அதிகாரவாணையற்ற அதிகாரிகள், சார்ஜன்ட் மற்றும் சிப்பாய்களின் விடுதியையும் பார்வையிட்டார்.

வன்னி தளபதி முகாமை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் விருந்தினர் பதிவேட்டில் தனது பாராட்டுகளை பதிவிட்டார். பின்னர் 3 வது இலங்கை கவசப் வாகன படையணியின் கட்டளை அதிகாரியினால் வன்னி தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.