02nd December 2023 10:42:53 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப்பிரிவின் 522 வது காலாட் பிரிகேடின் படையினரின் நிதியுதவியுடன், 522 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.ஏ.டி.சி.ஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கெவில் அரசினர் தமிழ் கலவன் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை திங்கட்கிழமை (நவம்பர் 27) வழங்கினர்.
இத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 45 மாணவர்கள் கல்வி ஊக்கத்தொகையாகப் கற்றல் உபகரணங்களை பெற்றனர். நன்கொடை நிகழ்ச்சியின் முடிவில், அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு படையினரால் வழங்கப்பட்டது.
522 வது காலாட் பிரிகேடின் 1 வது இயந்திரவியல் காலாட் படையினரால் இந்நிகழ்ச்சி ஒழுங்கமைக்கப்பட்டது.