Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd December 2023 10:37:39 Hours

இந்திய உயர் ஸ்தானிகர் இந்திய அமைதி காக்கும் படை வீரர்களின் நினைவுத் தூபியிக்கு அஞ்சலி

இந்திய உயர் ஸ்தானிகர் மேதகு கோபால் பாக்லே, கொழும்பு இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஆறு அதிகாரிகள் மற்றும் யாழில் உள்ள இந்திய தூதுவர் திரு. ராகேஷ் நட்ராஜ் ஆகியோர் டிசம்பர் 01 அன்று யாழில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை வீரர்களின் நினைவுத் தூபியில் வீரமரணமடைந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே.நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி கேணல் கே.வீரசிங்க யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.