Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2023 20:12:12 Hours

3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி சிப்பாயினால் கண்டெடுத்த பணம் மீள் அளிப்பு

3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி சிப்பாய் ஜீஎல்பீகேபீ மதுஷங்க கொடுவேகொட இலங்கை வங்கியின் பண வைப்பு இயந்திரத்தில் எதிர்பாராதவிதமாக கண்டெடுத்த ரூ. 14,000.00 பணத்தினை மீள் ஒப்படைத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (24) தனது குடும்பத்திற்காக பணத்தை வைப்பிலிட முற்பட்ட போது பண வைப்பு இயந்திரத்தில் இந்தத் தொகை கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து அவர் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி நிறைவேற்று அதிகாரிக்கு அறிவித்துடன் அதனை வங்கி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

பின்னர், வங்கிக்கு அழைக்கப்பட்ட அவர், 14,000 ரூபாயை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இராணுவ வீரரின் முன்மாதிரியான செயலை வங்கி அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.