30th November 2023 20:07:14 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள் மட்டக்களப்பு ஆயர் அருட்தந்தை வண. ஜோசப் பொன்னையா அவர்களை புதன்கிழமை (நவம்பர் 30) மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
ஆயருடனான உரையாடல்களின் போது, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மாவட்டத்தில் உள்ள சிவில்-இராணுவ ஒருங்கிணைப்புத் திட்டங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடினார். மேலும், கிழக்குத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் அப்பகுதியில் நடைபெறவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
சந்திப்பின் முடிவில், ஆயர் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி அவர்களுக்கு ஆசீர்வாதங்களைத் தெரிவித்துடன் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
243 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎம்சிஎஸ் குமாரசிங்க,கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக கேணல் ஒருங்கிணைப்பு டீஎச்எம்டிஆர்எம் பீரிஸ் ஆர்எஸ்பீ பீஎஸ்சி, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக சிவில் விவகார தலைமை ஒருங்கிணைப்பாளர் கேணல் எச்எச்பீசி ஹல்பகே மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.