30th November 2023 20:04:55 Hours
14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணி இலங்கை பொறியியல் படையணியுடன் இணைந்து ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 47 உறுப்பினர்களுக்கு 'வெடிப்பொருட்களை அடையாளம் காணுதல் மற்றும் கையாளுதல் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வை கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் நவம்பர் 25 - 26 ஆம் திகதிகளில் செயலமர்வு நடாத்தப்பட்டது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதி மற்றும் தலைமை களப் பொறியியலாளர் ஆகியோரின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் கீழ் 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணியின் கட்டளை அதிகாரியின் கண்காணிப்பில் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
01 அதிகாரி மற்றும் 05 சிப்பாய்களை உள்ளடக்கி பயிற்றுவிப்பு குழுவினரால் கோட்பாட்டு விளக்கங்கள் மற்றும் நடைமுறை விளக்கங்களுடன் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் விரிவான அறிவு வழங்கப்பட்டது.
மேலும், பங்கேற்பாளர்கள் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் மற்றும் வெடிபொருட்களை அடையாளம் காண்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் நுணுக்கங்களை நேரில் காண வாய்ப்பு வழங்கப்பட்டது. அமர்வு கோட்பாட்டு அறிவை நிறைவு செய்தது மட்டுமல்லாமல், துறையில் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய யதார்த்தமான புரிதலையும் வழங்கியது.