Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th November 2023 09:19:25 Hours

இலங்கை சமாதான ஆதரவு செயற்பாடுகள் பயிற்சி நிறுவனம் பொது மக்களுக்கு நிவாரணம்

இலங்கை சமாதான ஆதரவு செயற்பாடுகள் பயிற்சி நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் மாகெலியெல்ல மற்றும் கொஸ்குலன பிரதேசத்தில் வசிக்கும் 100 ஆதரவற்ற குடும்பங்களுக்கு தலா ரூ. 5000/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் சனிக்கிழமை (நவம்பர் 18) இலங்கை சமாதான ஆதரவு செயற்பாடுகள் பயிற்சி நிறுவன வளாகத்தில் விநியோகிக்கப்பட்டன.

இலங்கை சமாதான ஆதரவு செயற்பாடுகள் பயிற்சி நிறுவன தளபதி பிரிகேடியர் சிஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் கருத்திற்கு அமைய பேலியகொட லயன்ஸ் கிளப் இந்த நிவாரணத் திட்டத்திற்கு அனுசரணை வழங்கியது. இலங்கை சமாதான ஆதரவு செயற்பாடுகள் பயிற்சி நிறுவனத்தின் தளபதி மற்றும் லயன்ஸ் கழகத்தின் தலைவர் பேலியகொட பிரதேசத்தில் உள்ள பொதுமக்களின் பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை ஒருங்கிணைத்தார்.

இவ் விநியோக நிகழ்வில் பிரிகேடியர் சிஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன் போது லயன்ஸ் கழக உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.