29th November 2023 10:01:23 Hours
இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்கள் தலைமையிலான இலங்கை இராணுவத் தொண்டர் படையணி அதிகாரிகள் மற்றும் சிப்பாய் குழுவினர் 2023 நவம்பர் 23-24 ம் திகதிகளில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தொண்டர் படையலகில் வருடாந்த நிர்வாகப் பரிசோதனையை மேற்கொண்டனர்.
வழக்கமான ஆய்வின்போது படையலகின் செயல்பாட்டு அம்சங்கள் மற்றும் தியத்தலாவ மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலை ஆகியவற்றின் நிர்வாகம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் யூ.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இந்த ஆய்விற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
வருகை தந்த இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதியை தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் ஜேஎஜே ஜயரத்ன கேஎஸ்பீ, பிரிகேடியர் ஒருங்கிணைப்பு அதிகாரி பிரிகேடியர் எஸ்கேஎம்எம்என்கே மஹாந்தே கேஎஸ்பீ மற்றும் கேணல் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
இதன் போது இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி அவர்கள் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, மேஜர் ஜெனரல் டபிள்யூ டபிள்யூ எச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களையும் சந்தித்தார்.