29th November 2023 09:56:31 Hours
வரலாற்றுச் சிறப்பு மிக்க வீரமடுகல்லே திசாவ மற்றும் வீரமொனரவில கெப்பெட்டிபொல திசாவ்வின் 205வது ஆண்டு நிறைவானது மடுகல்ல'அபிமன்சல 3' நல விடுதியின் புனர்வாழ்வு போர்வீரர்களின் பங்கேற்புடன் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) பாங்கொல்லையில் இடம்பெற்றது.
சுமார் 205 வருடங்களுக்கு முன்னர், 1818 ஆம் ஆண்டு பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக 'ஊவா-வெல்லஸ்ஸ' விடுதலைப் போராட்டத்தின் போது 'வீரமடுகல திசாவ' மற்றும் 'வீரமொனரவில கெப்பெட்டிபொல மஹா திசாவ' ஆகியோர் தம் இன்னுயிரை ஈந்தனர்.
அபிமன்சல-3’ இன் தளபதி பிரிகேடியர் பீகேஜிசீ பாஸ்குவல், அவர்கள் ‘வரவேற்றதுடன், வருகை தந்த விருந்தினர்களை போர் வீரர் ஒருவர் நுழைவாயிலில் தாம்பூலம் வழங்கி வரவேற்றார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ‘மடுகல்ல தலைமுறையின்’ தலைவி திருமதி நில்மினி வெலிவிட்டவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஆசீர்வாதங்கள் மற்றும் நிலை மாற்றம், தேசிய கீதம் இசைத்தல், போர்வீரர்களுக்கு அத்தியாவசியப் பொதிகள் வழங்குதல் மற்றும் சுருக்கமான சொற்பொழிவுகள் போன்றன இடம்பெற்றன.