Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th November 2023 09:13:12 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் ஓயியவில் ரயில் பாதை சீரமைப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 22) காலை கொழும்பில் இருந்து பதுளை வரை செல்லும் மலையக ரயில் பாதை ஓயியவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் மண் சரிவு காரணமாக தடைப்பட்டது.

ரயில்வே அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, மேஜர் ஜெனரல் டபிள்யூ டபிள்யூ எச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 20 பேர் கொண்ட இராணுவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மண் மேடுகள் மற்றும் பாறைகளை அகற்றினர். அதனையடுத்து மீண்டும் ரயில் சேவை ஆரம்பமானது. இப் பணிக்கு ரயில்வே திணைக்கள ஊழியர்கள் ஆதரவு வழங்கினர்.