Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th November 2023 09:24:32 Hours

முல்லைத்தீவு மக்களுக்கு தென்னம் பிள்ளைகள் விநியோகம்

முல்லைத்தீவில் 2வது தென்னை முக்கோண வலயத்தை நிர்ணயம் செய்வதற்கான அதன் தற்போதைய திட்டத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64 வது காலாட் படைப்பிரிவின் படையினர் அதன் 2ம் கட்ட விநியோகத்தை ஆரம்பித்தனர். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 40 குடும்பங்களுக்கு நவம்பர் 23 பயனாளிகளை 64 வது காலாட் படைப்பிரிவு தலைமையக வளாகத்திற்கு வரவழைத்து தென்னம் பிள்ளைகளை வழங்கினர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதல்களுக்கமைய இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.எஸ் தேவப்பிரிய யுஎஸ்பீ அவர்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தார்.

இலவச விநியோகம் மூலம், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் எதிர்காலத்தில் தேங்காய்களை உற்பத்தி செய்யக்கூடிய இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முடிவிற்கு இணங்க இந்த திட்டத்தை வெற்றியடையச் செய்ய எதிர்பார்க்கிறது. இதன்போது அலம்பில் அரசபண்ணையினால் தேவையான தென்னம் பிள்ளைகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் அரச அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.