29th November 2023 10:07:48 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 வது காலாட் படைப்பிரிவின் 562 வது காலாட் பிரிகேடின் 17 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் வடக்கு இரண்டாம் 'தெங்கு முக்கோண வலயத்தின் பெரியகாடு பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு 1000 தென்னம் பிள்ளைகளை புதன்கிழமை (நவம்பர் 22) வழங்கினர்.
தென்னை அபிவிருத்திச் சபையின் வன்னி கிளையின் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட தென்னம் பிள்ளைளை கிராம சேவை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் விநியோகிக்கப்படுவதற்கு முன்னர் 17 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு பயனாளிகள் அழைக்கப்பட்டனர்.
இந்த விநியோக நிகழ்வில் 562 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிஎம்எஸ்ஜே தென்னகோன் ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
17 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்எம்ஜே பிரேமதிலக்க ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் விநியோக நிகழ்வில் பங்குபற்றினர்.