29th November 2023 10:11:58 Hours
எதிர்வரும் இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி போர் வீரர் தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (நவம்பர் 23) கலத்தேவவில் உள்ள போர் வீரர்கள் நினைவுத்தூபியில் உயிரிழந்த இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ செயலாளரும் இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியுஎம் பெர்னாண்டோ டப்ளியுடப்ளயுவீ ஆர்டப்ளியுவீ ஆர்எஸ்பீ வீஎஸவீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களுடன் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முதல் நிகழ்வாக படைத் தளபதியினை இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி நிலைய தளபதி பிரிகேடியர் பீஎன் விஜேசிறிவர்தன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ மற்றும் கவச வாகன பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்கேடி பெர்னாண்டோ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆகியோர் நுழைவாயிலில் வரவேற்றனர்.
பின்னர், அன்றைய பிரதம விருந்தினர், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் நினைவுத்தூபிக்குச் சென்று அவர்களின் நினைவாக மலர் அஞ்சலி செலுத்தினர்.
அன்றைய நிகழ்வின் இறுதியில் படைத்தளபதி மறைந்த போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் சில தருணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இலங்கை இராணுவ கவச வாகனப் படையணியின் 28 அதிகாரிகள் மற்றும் 415 சிப்பாய்கள் மே 2009 க்கு முன்னர் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது தமது இன்னுயிரை தியாகம் செய்தனர்.