Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd November 2023 15:59:45 Hours

'மித்ரசக்தி' கூட்டு இராணுவப் பயிற்சியின் இறுதி பயிற்சிக்குத் தயார்

இந்திய இராணுவத்தின் 120 படையினர், இலங்கை இராணுவத்தின் 123 படையினர், இந்திய விமானப்படையின் 15 படையினரும் இலங்கை விமானப்படையின் 05 படையினரும் இணைந்த கூட்டு இராணுவப் பயிற்சியான 'மித்ர சக்தி- 2023யின் 9 வது கட்டம் வியாழக்கிழமை (நவம்பர் 16) இந்தியா புனேவில் உள்ள அவுந்த் நகரில் ஆரம்பமானது.

தற்போதைய நிலையில், இரு குழுவினரும் தினசரி பயிற்சி அமர்வுகளில் காலை உடல் பயிற்சி/யோகா, போர் தடைகளை நீக்குதல், நிராயுதபாணியான போர்கள், சறுக்குதல் /கயிர் ஏறுதல், தோடுதல் பயிற்சிகள், மாதிரி விவாதங்கள் மற்றும் அவர்களின் இறுதி சுற்று பயிற்சிக்கான விரிவுரைகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.

அவர்களின் இறுதிப் பிரதான பயிற்சியான 'அமன் ரணசூரய' நவம்பர் 28 அன்று இரு தரப்பினரின் பங்கேற்புடன் கட்டளை இடுகை பயிற்சியாக நடைபெறும்.