21st November 2023 17:13:27 Hours
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் அண்மையில் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு இணைப்பாளர் கெப்டன் எம் ஆனந்த், திங்கட்கிழமை (நவம்பர் 20) பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே புதிய பாதுகாப்பு இணைப்பாளருடன் சில யோசனைகளைப் பகிர்ந்து கொண்டார், அங்கு இருவரும் இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையில் நிலவும் நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வின் பிணைப்புகளை நினைவு கூர்ந்தனர்.
இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சித் திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பல்வேறு பரிமாற்ற திட்டங்கள் மற்றும் பிற பொதுவான விடயங்கள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.
சுமூகமான சந்திப்பின் இறுதியில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே புதிய பாதுகாப்பு ஆலோசகருக்கு சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கி இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தினார்.