17th November 2023 16:52:12 Hours
ஹவாய் போர்ட் ஷாப்டரில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளை பிரதி தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ் ஸ்மித், கொழும்பு அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு உதவியாளர் லெப்டினன் கேணல் அந்தோனி சி. நெல்சன் ஆகியோருடன் மேஜர் பெஞ்சமின் புளோரஸ், மேஜர் ஒமர் கவாலியர் மற்றும் கெப்டன் கெய்ட்லின் பென்னிகூக் ஆகியோர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை வியாழக்கிழமை (நவம்பர் 16) இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தற்போதைய பாதுகாப்பு பிரச்சினைகள், இருதரப்பு பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் நன்மைகள்,இரு நிறுவனங்களுக்கும் பொதுவான ஏனைய விடயங்கள் குறித்து இராணுவ தளபதியுடன் தூதுக் குழுவினர் கருத்துளை பரிமாறிக் கொண்டனர்.
கலந்துரையாடலின் முடிவில், இலங்கை இராணுவத்திற்கும் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கும் இடையில் நிலவும் நல்லெண்ணம் மற்றும் புரிந்துணர்வை குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிகொள்ளப்பட்டன.
பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.