24th October 2023 10:26:21 Hours
யாழ். குடாநாட்டில் இராணுவத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வசதியற்ற சிறுவர்களுக்கான ஆங்கில மொழி கற்பித்தல் வகுப்புகளின் முன்னேற்றத்தை மதிப்பிடும் நோக்கத்துடன் 51 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியுபி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி அந்த இடத்திற்கு விஜயம் செய்து வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 20) இராணுவ பயிற்றுவிப்பு ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை சந்தித்தார்.
கோப்பாய் சனசமூக நிலையத்திலுள்ள வறிய யாழ். மாணவர்களின் நலனுக்காக 51 வது காலாட் படைப்பிரிவினரால் நிர்வகிக்கப்படும் ஆங்கில வகுப்புகள் இராணுவத்தின் ஆசிரியர்களை இலவசமாக நடாத்தி வருகின்றதுடன் தற்போது, 50 மாணவர்கள் மொழிப் பாடத்தை பின்பற்றுகின்றனர்.
அவரது வருகையின் போது, அவர் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கியதுடன் அவர்களின் மொழித்திறன் பற்றி விசாரித்து அவர்களுடன் சிறிது நேரம் செலவிட்டு அவர் வாழ்த்துக்களை தெரிவித்து வெளியேறினார்.