Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th October 2023 22:30:33 Hours

மேலும் இரண்டு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்கள் தங்கள் அதிகார வாள்களைப் பெற்றனர்

மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ் விக்கிரமரத்ன ஆர்எஸ்பீ மற்றும் நலன்புரி பணிப்பக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே வனசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆகியோர் (ஒக்டோபர் 16) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அலுவலகத்தில் இருந்து தமது அடையாள அதிகார வாள்களைப் பெற்றுக்கொண்டனர்.

தளபதி அலுவலகத்தில், அவர்கள் இராணுவத் தளபதியிடமிருந்து வாழ்த்துக்களையும் பெற்றதுடன் இராணுவத்தில் தங்கள் புதிய நிலைகளுடன் தொடர்புடைய அதிகாரத்தின் அடையாள வாள்களை ஏற்றுக்கொண்டனர்.

புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்கள் இருவரும், இராணுவத் தளபதியின் அன்பான வாழ்த்துக்களுக்கும் ஆசிகளுக்கும் நன்றி தெரிவித்து படங்ளை எடுத்து நிகழ்வின் நினைவுகளைச் சேர்த்தனர்.