Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th October 2023 22:34:29 Hours

ஜேர்மன் தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கை, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும் அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள ஜேர்மன் தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன் கேணல் ஆன்ட்ரே நீட்ஹோபர் மற்றும் பாதுகாப்பு இணைப்பாளர் கெப்டன் ஜெரால்ட் கோச் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை இராணுவ தலைமையகத்தில் திங்கட்கிழமை (16) மரியாதை நிமித்தம் நேரில் சந்தித்தனர்.

இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையே நிலவும் நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வின் பிணைப்புகளை நினைவுபடுத்தும் அதே வேளையில், இரு தரப்பினரும் பொதுவான விடயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இந்த சுமுகமான சந்திப்பு வழிவகுத்தது.

இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சித் திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வெவ்வேறு பரிமாற்ற நிகழ்ச்சிகளில் இரு நாடுகளின் ஆயுதப்படைகளின் பங்கேற்பு குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

சுமூகமான சந்திப்பின் உச்சக்கட்டத்திற்கு முன்னதாக, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் லெப்டினன் கேணல் ஆன்ட்ரே நீட்ஹோபர், கெப்டன் ஜெரால்ட் கோச் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தினார்.