Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th October 2023 22:29:09 Hours

வெளிசெல்லும் பீரங்கி படையணியின் படைத் தளபதி மற்றும் பதவி நிலை பிரதானிக்கு பிரியா விடை

இலங்கையில் இராணுவத்தில் 35 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றி ஓய்வுபெற்ற இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களுக்கு வியாழக்கிழமை (ஒக்டோபர் 12) பிரியாவிடை பனாகொட இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் தலைமையகத்தில் வழங்கப்பட்டது.

இதன்போது நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்படுவதற்கு முன்னர், சிரேஷ்ட அதிகாரியை இலங்கை பீரங்கி படையணியின் நிலைய தளபதி மரியாதையுடன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, படையணி நினைவுத்தூபியில் உயிரிழந்த இலங்கை பீரங்கி படையணி வீரர்களின் நினைவுச் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், அணிவகுப்பு சதுக்கத்தில் வண்ணமயமான அணிவகுப்பு மரியாதையை வழங்கப்பட்டது. அன்றைய நிகழ்வின் நினைவாக இலங்கை பீரங்கி படையணியின் படையினர்களுடன் குழு படம் எடுத்துக் கொண்டார். பின்னர், அவர் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்ட் உணவகத்தில் தேநீர் விருந்துபசாரத்தில் பங்கேற்றுக்கொண்டதுடன் அவரின் சேவையை பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.

அன்றைய நிகழ்வின் நிறைவாக அவர் சிப்பாய்கள் உணவகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட அனைத்து நிலையினருக்குமான மதிய உணவில் பங்கேற்றார், அங்கு அவர் வளாகத்தில் பணியாற்றும் படையினர் மற்றும் சிவில் ஊழியர்களுடன் உரையாடினார்.

மதிய உணவின் முடிவில், வெளிசெல்லும் சிரேஷ்ட அதிகாரி அதிகாரிகளிடம் பதவி காலத்தில் அவர்கள் வழங்கிய ஆதரவைப் பாராட்டினார். இந்நிகழ்வின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.