13th October 2023 12:38:36 Hours
61 வது காலாட் படைப்பிரிவின் 2 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர் புதன்கிழமை (ஒக்டோபர் 11) அடைமழை காரணமாக இமதுவ மற்றும் பின்னதுவ இடையேயான 102 கி.மீ தொலைவுக்கு அருகில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சரிந்த விழுந்த மண் மேட்டை அகற்றுவதற்கு உடனடியாக தமது அயராத உதவிகளை வழங்கினர்.
நிலச்சரிவின் அளவைக் கருத்தில் கொண்டு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமிதா பண்டார தென்னகோன் அவர்களுடன் வியாழக்கிழமை (ஒக்டோபர் 12) அங்கு பணியில் இருக்கும் படையினரிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்காக அவ் விடத்திற்கு விஜயம் செய்தார்.
இருவரும் படையினரின் முயற்சிகளைப் பாராட்டியதுடன், தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும்போது அவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் சில சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.