Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th October 2023 18:41:41 Hours

பனாகொடவில் இராணுவ தின கொண்டாட்டம்

பயங்கரவாதத்திற்கு எதிரான தொடர்ச்சியான மூன்று தசாப்தங்களுக்கும் மேலான போரில் தேசத்திற்கு நீடித்த அமைதியைக் கொண்டு வந்த ஈடு இணையற்ற சேவை வழங்குனர் மற்றும் பெருமைக்குரிய 'தேசத்தின் பாதுகாவலர்' ஆகிய இலங்கை இராணுவம் தனது 74 வது ஆண்டு நிறைவை இன்று (ஒக்டோபர் 10) பனாகொடயில் பிரமாண்டமாகக் கொண்டாடியது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் நிகழ்வில் நினைவேந்தல் கௌரவத்தையும் முக்கியத்துவத்தையும் சேர்க்கும் வகையில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இதன்போது இராணுவக் கொடி, படையணி மற்றும் இராணுவ அமைப்புக்கள் உட்பட பல வண்ணக் கொடிகள் பறக்கவிடப்பட்டன. இராணுவத் தளபதியின் வருகையின் பின்னர் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன்போது இராணுவ சம்பிரதாயங்கள், நேர்த்தியாக உடையணிந்த பாதுகாவலர் அணிவகுப்பு மரியாதைக்கு பின்னர் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி வாழ்த்தி, இராணுவத் தளபதியை வரவேற்றார். பின்னர் மரியாதைகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஆகியோர் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் அணிவகுப்பு மைதானத்தின் நுழைவாயிலுக்கு வந்தடைந்தனர். பின்னர் இராணுவக் கொடியை ஏற்றி நடவடிக்கைகளைத் தொடங்கினர்.

அனைத்துத் நிலையினருடனும் புனிதமான கடமைகளையும் தன்னலமற்ற இராணுவம் மற்றும் இலங்கையின் வரலாறு அர்ப்பணிப்புகளையும் தொகுத்து வழங்கும் இராணுவப் கீதம் இசைக்கப்பட்டதுடன் அனைத்து அழைப்பாளர்களும் வீரமரணம் அடைந்த அனைத்து போர் வீரர்களையும் நினைவுகூரும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

அணிவகுப்பு கட்டளை அதிகாரியாக பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்களுடன் 2வது கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் எஸ்.பீ மலவரகே ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜீ அவர்களுடன் இணைந்து இந்த ஆண்டுக்கான இராணுவ தின அணிவகுப்பில் 85 அதிகாரிகள் மற்றும் 650 சிப்பாய்கள் அடங்கிய அணிவகுப்பு இடம்பெற்றது. பிரதம அதிதி அணிவகுப்பை மீளாய்வு செய்த பின்னர், நேர்த்தியான உடையணிந்த இராணுவத்தினர் இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க இராணுவ தளபதிக்கு மரியாதை செலுத்தினர்.

மற்றுமொரு நினைவு நிகழ்வாக அன்றைய பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பின்னர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இராணுவத் தளபதியின் பாராட்டுச் சின்னம், அமைப்புக்கு பெருமை சேர்த்த அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட 43 இராணுவ வீரர்களுக்குப் பொருத்தினார். பரிசு பெற்றவர்கள் துணிச்சல், நேர்மை, தேசிய அவசர நிலைகளில் அர்ப்பணிப்பு மற்றும் தங்கள் உயிருக்கு ஏற்படும் சொந்த அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொள்ளாமல் கடமை போன்றவற்றில் தனித்துவமான சாதனையாளர்களாக இருந்தனர்.

இந்த நிகழ்வில் இராணுவ தளபதி தனது சுருக்கமான உரையில், கடந்த கால தளபதிகள், மறைந்த மற்றும் காயமடைந்த போர்வீரர்கள், சேவையில் உள்ள அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை நினைவு கூர்ந்த்துடன் அனைத்து நிலையினரும் தங்கள் சிறந்த பணிகளையும் அர்ப்பணிப்பையும் எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாட்டின் சிறந்த நலன்கள் குடிமக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் அதே வேளையில் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக செயல்முறைகளை பாதுகாப்பதில் இராணுவம் எப்போதும் உறுதியுடன் இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார். நியாயமான வள முகாமைத்துவத்தில் இலங்கை இராணுவம் ஒரு முன்மாதிரியாக இருக்க முயற்சிப்பதாகவும், பொருளாதார மறுமலர்ச்சிக்கான தேசிய முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி, பிரதான பணிநிலை அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகளின் துணைவியர்கள் மற்றும் சிப்பாய்கள் என பலரும் கலந்து கொண்டனர்.