08th October 2023 20:53:00 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட உலக சிறுவர் தின நிகழ்ச்சித் திட்டம், பண்டாரவளை லயன்ஸ் கழகத்தின் ஆதரவுடன் தியத்தலாவ கதுருகமுவ மிஹிந்து வித்தியாலய மாணவர்களுக்காக ஒக்டோபர் 3 ஆம் திகதி இடம்பெற்றது.
நிகழ்ச்சியின் முதல் பிரிவாக, தியத்தலாவ கதுருகமுவ மிஹிந்து வித்தியாலய ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான உபகரணப் பொதிகள் வழங்கப்படுவதற்கு முன்னர், தியத்தலாவ கோல்ப் கிளப் மைதானத்திற்கு வருகை தந்த மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொது பணி கேணல் டபிள்யூ.எ.ஜே ஹேமச்சந்திர ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மாணவர்களுக்கான 'தலைமைத் பண்புகள்' தொடர்பான விரிவான விரிவுரையை நிகழ்த்தினார்.
நிகழ்வின் நிறைவில், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் பாடசாலையின் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமூக விருந்தாக சுவையான மதிய உணவை வழங்கினர்.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வீ யூஎஸ்பீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ அவர்கள் இந் நிகழ்வின் வெற்றிக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.