06th October 2023 22:07:58 Hours
மாத்தறை, திஹாகொட, மாலிம்பட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, பிடபெத்தர, அதுரலிய மற்றும் திக்வெல்ல மற்றும் பல்வேறு பிரதேச செயலகப் பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை 61 வது காலாட் படையினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
613 வது காலாட் பிரிகேட் படையினர் வியாழக்கிழமை (ஒக்டோபர் 5) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்குச் சென்று உணவு வழங்கினர். இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான இப்பணி அப்பகுதிகள் இயல்பு நிலை திரும்பும் வரை தொடரும்.